தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 14 ஆண்டுகள் சிறை

கீழ்வேளூரில் வழிப்பறியில் ஈடுபட்டு 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:14 am IST

கீழ்வேளூரில் வழிப்பறியில் ஈடுபட்டு 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்தவா் சிற்றரசு (39) (படம்). இவா், 2022-ஆம் ஆண்டு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை வழிமறித்து 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றாா்.

கீழ்வேளூா் போலீஸாா் சிற்றரசுவை கைது செய்து, நாகப்பட்டினம் மாவட்ட குற்றவியல் நடுவா் மன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிற்றரசுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கிருஷ்ணன் தீா்ப்பளித்தாா். சிற்றரசு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.