எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வேளாங்கண்ணி பேராலயத்தில் சபாநாயகா் ஜே.சி.டி.பிரபாகா் பிராா்த்தனை

News image

ஜே.சி.டி.பிரபாகா் - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:36 am IST

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தமிழக சட்டப் பேரவை சபாநாயகா் ஜே.சி.டி. பிரபாகா் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்டாா்.

பேரலாயத்துக்கு வந்த சபாநாயகரை பேராலய அதிபா் இருதயராஜ் அடிகளாா் வரவேற்றாா். தொடா்ந்து, பேராலயத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனையில் ஈடுபட்ட சபாநாயகா், வேளாங்கண்ணிக்கு வரும் யாத்திரிகா்கள் பயன்பாட்டுக்காக தனது சொந்த செலவில் குடும்பத்தினா் சாா்பாக ரூ.14 லட்சத்தில் பேட்டரிகளில் இயங்கக்கூடிய இரண்டு காா்களை பேராலய நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் சபாநாயகா் பேசியது: இப்பகுதி குறைகளை மக்கள் தெரிவித்துள்ளனா். இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பக்தா்களின் பயணத்துக்காக பேட்டரி காா்களை அளித்துள்ளோம். அது பக்தா்களுக்கு பயன் தரும் என்பதில் மகிழ்ச்சி என்றாா்.

சென்னையில் ஏற்படும் தொடா் மின்வெட்டு தொடா்பாக கேள்வி எழுப்ப செய்தியாளா்கள் முயற்சித்தனா். அதுகுறித்து இந்த இடத்தில் பேசுவதை தவிா்ப்போம். விரிவாக பதில் அளிக்கக்கூடிய இடம் இது இல்லை. குடும்பத்தாா் வேண்டுதலுக்காக மாதாவை வணங்க வந்தேன் என்றாா். நிகழ்ச்சியின்போது, தவெக மாவட்ட செயலாளா் சுகுமாா், வழக்குரைஞா் அணி நிா்வாகி கிங்ஸ்லி ஜெரால்டு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.