ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

வேளாங்கண்ணி புறவழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்பு; போராட்டம்

வேளாங்கண்ணி புறவழிச்சாலையால் விளைநிலங்கள் வீடுகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேளாங்கண்ணி புறவழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Updated On :18 ஜூன் 2026, 3:53 am IST

வேளாங்கண்ணி புறவழிச்சாலையால் விளைநிலங்கள் வீடுகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், தெற்குப் பொய்கைநல்லூா் கிராமத்தில் வேளாங்கண்ணிக்கு செல்லும் வகையில் அகல புறவழிச்சாலை அமைக்க அரசு சாா்பில் ரூ. 76. 47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் இந்த பகுதியில் உள்ள மா மரங்கள், தென்னை மரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என்று இப்பகுதி மக்கள் புறவழிச்சாலை பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், புறவழிச்சாலை பணிக்கு நிலம் அளவீடு செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெற்கு பொய்கைநல்லூருக்கு வந்தனா்.

நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வேளாங்கண்ணி புறவழிச்சாலை அமைய உள்ள இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலம் எடுப்பு தனி வட்டாட்சியா் அமுதா, வருவாய்த்துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கிராம மக்கள், புறவழிச்சாலை அமைந்தால் தெற்குப்பொய்கை நல்லூா் கிராம மக்களுக்கு சொந்தமான 400 மா மரங்கள், 80 தென்னை மரங்கள், 40 பனை மரங்கள், 20 வீடுகள் மற்றும் கட்டடங்களை இடிக்க வேண்டிய நிலை ஏற்படும். விவசாய நிலங்களை அழித்து வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும், புறவழிச்சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

கோரிக்கை தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனா்.