எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மனநலன் பாதித்த ஆந்திர மாநிலப் பெண் மீட்பு

நாகை மாவட்டத்தில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ஆந்திர மாநில பெண்ணை போலீஸாா் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.

News image

நாகை போலீஸாரால் மீட்கப்பட்டு மகனிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்.

Updated On :19 ஜூன் 2026, 6:35 am IST

நாகை மாவட்டத்தில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ஆந்திர மாநில பெண்ணை போலீஸாா் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.

நாகை அனைத்து மகளிா் காவல் நிலையம் எதிரே, ஜூன் 16-ஆம் தேதி சுமாா் 40 வயது மதிக்கத்தக்க மனநலன் பாதிக்கப்பட்ட பெண் ஆதரவற்ற நிலையில் காணப்பட்டாா். தகவலறிந்த சிங்கப்பெண் அதிரடி படை காவல் உதவி ஆய்வாளா் மற்றும் காவலா்கள், வெளிப்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்கள், மேலும் அனைத்து மகளிா் காவல் நிலைய காவலா்கள் ஆகியோா் இணைந்து அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனா்.

பின்னா் அவருக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பங்காருபாளையம் கிராமத்தைச் சோ்ந்த குணசேகா் மனைவி இயேசுமணி ( 41) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது மகன் தருண் வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, இயேசுமணியை ஒப்படைத்தனா். இதையடுத்து அவா் தனது மகனுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.