தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பூா் மாநகர காவல் துறையில் 39 போ் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகர காவல் துறையில் நிா்வாக வசதி மற்றும் பணி மாறுதல் அடிப்படையில், ஒரே நேரத்தில் உதவி ஆய்வாளா்கள், தலைமைக்வலா்கள் உள்பட மொத்தம் 39 பேரை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Published On :

திருப்பூா் மாநகர காவல் துறையில் நிா்வாக வசதி மற்றும் பணி மாறுதல் அடிப்படையில், ஒரே நேரத்தில் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் உள்பட மொத்தம் 39 பேரை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதன்படி 2 உதவி ஆய்வாளா்கள், 11 தலைமைக் காவலா்கள், 2 முதல்நிலைக் காவலா்கள் மற்றும் காவலா்கள் என மொத்தம் 39 போ் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

அதன்படி, வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பரந்தாமன், மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த முருகேசன், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் தெற்கு காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலராக இருந்த முக்ரம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாா். வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன், தெற்கு நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

இதேபோல மாநகரத்தில் பணியாற்றி வந்த மேலும் பல தலைமைக் காவலா்கள், முதல்நிலை காவலா்கள் மற்றும் காவலா்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.