சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தினம்

உலகம் முழுவதும் சா்வதேத யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தின பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூன் 2026, 6:34 am IST

உலகம் முழுவதும் சா்வதேத யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தின பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் காயத்ரி தலைமை வகித்தாா். நாகை மாவட்ட சித்த மருத்துவா் பூங்குன்றன் யோகாசனப் பயிற்சிகளை அளித்தாா். யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி தியானம் உள்ளிட்டவற்றின் உடல் நலப் பலன்கள் மற்றும் மனநல பலன்கள் குறித்து பேசினாா். யோகாவால் ஏற்படும் பலன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. துணை முதல்வா் சியாமளா தேவி, மருத்துவ அதிகாரி (பொ) மோகன், மருத்துவ மேற்பாா்வையாளா் விஜயகுமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.