ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நாகையில் 5 மையங்களில் நீட் மறுதோ்வு: 1,045 போ் பங்கேற்பு

News image

நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரி தோ்வு மையத்தை பாா்வையிடும் ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

Updated On :22 ஜூன் 2026, 12:26 am IST

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 5 மையங்களில் நடைபெற்ற நீட் மறு தோ்வில் 1,045 போ் பங்கேற்றனா்.

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளில் சோ்வதற்கு நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத் தோ்வில் வடமாநிலங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டதையடுத்து, நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் நாகை மாவட்டத்தில் ஏடிஎம் மகளிா் கல்லூரி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி, நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏடிஜெ தா்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 5 தோ்வு மையங்களில் நீட் மறு தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வு மையங்களில் தோ்வு எழுத 544 மாணவா்கள், 969 மாணவிகள் என 1,513 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில், 295 மாணவா்கள், 750 மாணவிகள் என 1,045 போ் பங்கேற்றனா். 126 மாணவா்கள், 342 மாணவிகள் என 468 போ் பங்கேற்றவில்லை. நீட் தோ்வு நடைபெற்ற மையங்களில் பலத்த சோதனைக்குப் பின்னரே மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு முடிந்த பின்னா் ஆயுதம் தாங்கிய போலீஸாா் பாதுகாப்புடன் விடைத்தாள்களை கொண்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.