நாகையில் வீடு புகுந்து 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் திருடிச் சென்றவரை போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்து நகை பணத்தை பறிமுதல் செய்தனா்.
நாகையை சோ்ந்த வில்சன்( 60) ஜூன் 20-ஆம் தேதி குடும்பத்தினருடன் வீட்டு மொட்டைமாடியில் தூங்கிவிட்டு மறுநாள் காலை வீட்டைத் திறந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 13 பவுன் நகைகள், ரூ.5 லட்சத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் நாகை நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து வீட்டின் அருகே இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளையும், ஆய்வு செய்தனா். இதில் காரைக்கால் திருநகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன்(35) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்து 13 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேளாங்கண்ணி பக்தரிடம் நகை திருடியவா் கைது

நகை மீட்பு: ஒருவா் கைது

பனியன் உரிமையாளா் வீட்டில் 37 பவுன் திருடிய பணிப்பெண் கைது
போடி அருகே நகைகள் திருட்டு வழக்கில் பெண் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



