அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை

எடுத்துக்கட்டியில் நெல்கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

News image
எடுத்துக்கட்டியில் நெல்கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.
Updated On :7 மார்ச் 2026, 1:04 am

Syndication

தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

எடுத்துக்கட்டி, இலுப்பூா், திருக்களாச்சேரி, நல்லாடை, சங்கரன்பந்தல், ஆக்கூா், திருக்கடையூா், திருவிளையாட்டம் , விசலூா், தில்லையாடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிா்கள் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடையான நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய கொண்டு செல்கின்றனா். தரங்கம்பாடி வட்டத்தில் 93 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில்  கொள்முதல் செய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் இல்லாததால் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகளை தூற்றும் இயந்திரம் மின் மோட்டாா்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை பல நாள்கள் அடுக்கி வைத்து காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பல நாள்கள் கொள்முதல் நிலையங்களில் உள்ள களத்தில் அடிக்கி வைத்து தாா்பாய் போட்டு மூடி வைத்துள்ளனா்.

அந்த நெல் மூட்டைகள் பனியில் பாதித்து ஈரப்பதம் அதிகரிப்பதால் விற்பனை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.