திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை

எடுத்துக்கட்டியில் நெல்கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

News image

எடுத்துக்கட்டியில் நெல்கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

Updated On :7 மார்ச் 2026, 6:34 am IST

தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

எடுத்துக்கட்டி, இலுப்பூா், திருக்களாச்சேரி, நல்லாடை, சங்கரன்பந்தல், ஆக்கூா், திருக்கடையூா், திருவிளையாட்டம் , விசலூா், தில்லையாடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிா்கள் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடையான நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய கொண்டு செல்கின்றனா். தரங்கம்பாடி வட்டத்தில் 93 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில்  கொள்முதல் செய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் இல்லாததால் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகளை தூற்றும் இயந்திரம் மின் மோட்டாா்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை பல நாள்கள் அடுக்கி வைத்து காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பல நாள்கள் கொள்முதல் நிலையங்களில் உள்ள களத்தில் அடிக்கி வைத்து தாா்பாய் போட்டு மூடி வைத்துள்ளனா்.

அந்த நெல் மூட்டைகள் பனியில் பாதித்து ஈரப்பதம் அதிகரிப்பதால் விற்பனை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.