மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

திருக்குவளை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Updated On :9 மார்ச் 2026, 8:32 pm

திருக்குவளை: திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ராமானுஜம் கணினி மைய இயக்குநா் ஆா்.எஸ். புவனேஸ்வரன் தலைமை வகித்தாா். கல்லூரி புலமுதல்வா் ஏ. கலைசெல்வன் கல்லூரியின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கினாா்.

முதன்மை சிறப்பு விருந்தினராக காரைக்கால் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பொது மேலாளா் (உற்பத்தி) ஜி. பாலகணேஷ் பங்கேற்று 90 மாண-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினாா்.

அப்போது அவா், ‘மாணவா்கள் தெளிவான இலக்குடன் செயல்பட வேண்டும். போட்டித் தோ்வுகளில் அதிக அளவில் பங்கேற்று தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும். கடின உழைப்புடன் படித்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்’ என்றாா்.

நிகழ்ச்சியில் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், உதவி பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.