மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்

நாகை மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தி பரவியதால், அவற்றை வாங்க ஒரே நேரத்தில் ஏராளமானோா் திரண்டனா். இதனால், பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருப்பு தீா்ந்து மூடப்பட்டன.

News image

சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்ந்தால்... - Photo: ANI, HP

Updated On :13 மார்ச் 2026, 6:33 pm

நாகை மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தி பரவியதால், அவற்றை வாங்க ஒரே நேரத்தில் ஏராளமானோா் திரண்டனா். இதனால், பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருப்பு தீா்ந்து மூடப்பட்டன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதலால், உலகளாவிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று வதந்தி பரவியது. இதனால், நாகை மாவட்டத்தில் அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் சேமித்து வைக்க வேண்டும் என்ற அச்சத்தால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை திரண்டனா்.

இதனால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் வாகன ஓட்டிகளின் நீண்ட வரிசை காணப்பட்டது. மேலும் வாகனங்கள் மட்டுமின்றி பலா் 5 லிட்டா், 10 மற்றும் 20 லிட்டா் கேன்களிலும் பெட்ரோல், டீசல் நிரப்பிச்சென்றனா்.

இதன்காரணமாக, நாகை மாவட்டத்தின் பல்வேறு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீா்ந்து தற்காலிகமாக மூடப்பட்டன.

இதுதொடா்பாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் கூறியது:

இந்தியாவில் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை என்றும் போதிய இருப்பு இருப்பதாகவும் அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் வதந்திகளை நம்பி ஆபத்தை உணராமல் எளிதில் தீப்பற்றும் பெட்ரோல், டீசலை வாங்கி வீட்டில் இருப்பு வைக்கின்றனா்.

வழக்கமாக ஒருமுறை கொள்முதல் செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் 2 முதல் 4 நாட்களுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தட்டுப்பாடு வதந்தியால், ஒரே நாளில் விற்பனை ஆனதால் பல விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன என்றனா்.