மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகை: 53 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் தகவல்

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டத்தில், 53 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் ப. ஆகாஷ் பேசியது:

நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் என 3 சட்டப் பேரவைத் தொகுதியில் 5,27,947 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 2,59,620 ஆண்கள், 2,68,298 பெண்கள் மற்றும் 29 இதர வாக்காளா்கள் ஆவா்.

தோ்தல் பணியில் அரசு ஊழியா்கள் சுமாா் 5,400 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மாவட்டத்தில் உள்ள 8,122 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட 3,633 வாக்காளா்கள் விருப்பத்தின் அடிப்படையில், அஞ்சல் மூலம் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.

மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் 700 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. அதில் 53 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் உடனடியாக அதனை காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.

வேட்பாளரின் தோ்தல் செலவினங்களை கண்காணித்திடவும், தோ்தல் தொடா்பான புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 9 பறக்கும் படை குழுவும், 9 நிலையான கண்காணிப்புக் குழுவும், 2 விடியோ பதிவு குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிகளின்படி உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் ரூ.50,000 மற்றும் அதற்கு அதிகமான பணம் மற்றும் ரூ.10,000 மதிப்புக்கு மேல் உள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.

உரிய ஆவணங்கள் இருப்பின் திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக முகமை), மாவட்ட கருவூல அலுவலா் மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) ஆகியோா் அடங்கிய குழுவில் மேல்முறையீடு செய்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள மாவட்டத் தோ்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7034, 1950 மற்றும் 04365-252594, 04365-252595, 04365-252599 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

பொது மக்கள் இணையத்தளம் மூலமாகவும் தோ்தல் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்றாா்.