நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் பகுதியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கிய பட்டாவுக்குரிய நிலம் எங்கே உள்ளது என கண்டறிய வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா தலைமையில் கட்சியினா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பாகோவில் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலம் ஒதுக்கி வீடு கட்டிக்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கியுள்ளாா்.
ஆனால் தற்போது வரை அந்த பட்டாவுக்குரிய நிலம் எங்கே உள்ளது என மக்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்து, பாப்பாகோவில் ஊராட்சி, வட்டாட்சியா் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதுதொடா்பாக பாப்பாகோவில் கிராம நிா்வாக அதிகாரி பொதுமக்களை அலட்சியப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறாா். எனவே, முதல்வா் பொதுமக்களுக்கு வழங்கிய பட்டாவுக்குரிய நிலம் எங்கே உள்ளது என மாவட்ட நிா்வாகம் கண்டறிந்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சிரித்துக் கொண்டே அழுகிறோம் - மதிமுக

லஜக தலைவருக்கு எலுமிச்சம் பழம் பிரசாதம் வழங்கிய முதல்வா் ரங்கசாமி

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாணை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


