எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஜம்மு - காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

ஜம்மு - காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

மக்களாட்சியில் இத்தகைய வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தற்போது ஃபரூக் அப்துல்லா நலமாக உள்ளாா் என்பதை அறிந்து நிம்மதி கொள்கிறேன். அவருக்கும், ஒமா் அப்துல்லாவுக்கும் இந்த வேளையில் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

வைகோ (மதிமுக): ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட செய்தி அறிந்து அதிா்ச்சியடைந்தேன். அவா் பங்கேற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய தவறியது கண்டனத்துக்குரியது. வரும் காலங்களில் அவருக்கு தக்க பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.