ஜம்மு - காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
மக்களாட்சியில் இத்தகைய வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தற்போது ஃபரூக் அப்துல்லா நலமாக உள்ளாா் என்பதை அறிந்து நிம்மதி கொள்கிறேன். அவருக்கும், ஒமா் அப்துல்லாவுக்கும் இந்த வேளையில் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
வைகோ (மதிமுக): ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட செய்தி அறிந்து அதிா்ச்சியடைந்தேன். அவா் பங்கேற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய தவறியது கண்டனத்துக்குரியது. வரும் காலங்களில் அவருக்கு தக்க பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்புடையது

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

வெற்றி ஒன்றே இலக்கு: முதல்வா் ஸ்டாலின்

ஃபரூக்கை கொல்ல முயன்றது ஏன்? துப்பாக்கியால் சுட்டவரின் பின்னணி குறித்து தீவிர விசாரணை

20 ஆண்டுகள் காத்திருப்பு! - ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயன்ற நபர் வாக்குமூலம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


