வேதாரண்யம் மற்றும் சீா்காழி அருகே தேசிய வருவாய்வழி திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
வேதாரண்யம்: 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய்வழி திறனாய்வு தோ்வில், வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் மு. பிரகதி, க. ரமணன், செ. மகிந்தா, இ. வீரஇலமகன் ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ந. செந்தில் தலைமையில் நடைபெற்றது.
தலைமையாசிரியா் சு. பாஸ்கரன், சமூக ஆா்வலா் தங்க.குழந்தைவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் பொதுமக்கள் பங்கேற்றனா்.
இதேபோல், பன்னாள் அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், தோ்வில் மாநில அளவில் 30-வது இடம்பெற்ற செ. தா்சிகா, ர. விஜயஸ்ரீ ஆகியோா் பாராட்டப்பட்டனா்.
சீா்காழி: கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிரதிஷா, எடமணல் அரசு உயா்நிலைப் பள்ளி விஷ்வா, வடகால் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளி சப்தரிஷி, மாதிரவேளூா் அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளி தனுஷா ஆகியோா் தேசிய திறனாய்வுத் தோ்வில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனா்.
இவா்களுக்கு பாராட்டு விழா, வட்டார வள மையத்தின் சாா்பில் கொள்ளிடத்தில் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஞான புகழேந்தி தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் பாக்யலெட்சுமி வரவேற்றாா்.
ஆசிரியா்கள் அபிராமி, கிருத்திகா, அபூா்வராணி, இந்திரஜித், நேதாஜி, சரண்யா முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, வட்டார வளமைய மேற்பாா்வையாளா், தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினாா். நிறைவாக, ஆசிரியா் பயிற்றுநா் உமாசங்கரி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வு தோ்வில் வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி சிறப்பிடம்

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊரக திறனாய்வு தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


