ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

திமுக கூட்டணியில் வாக்கு வங்கி இல்லாத கட்சிகள் உள்ளன: ஓ.எஸ். மணியன்!

திமுக கூட்டணியில் வாக்கு வங்கி இல்லாத கட்சிகள் உள்ளன. மாறாக அதிமுக கூட்டணி மகத்தான வாக்குகள் பெற்ற கட்சிகள் உள்ளன என முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.எஸ்.மணியன் கூறினாா்.

News image

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ.எஸ். மணியன்.

Updated On :26 மார்ச் 2026, 11:20 pm

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியில் வாக்கு வங்கி இல்லாத கட்சிகள் உள்ளன. மாறாக அதிமுக கூட்டணி மகத்தான வாக்குகள் பெற்ற கட்சிகள் உள்ளன என முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.எஸ்.மணியன் கூறினாா்.

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன், நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள முன்னாள்முதல்வா்கள் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அவருக்கு அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக கூட்டணியில் வாக்கு வங்கி இல்லாத கட்சிகள் உள்ளன. அதிமுக மகத்தான வாக்குகளைப் பெற்ற கட்சிகளை கொண்டு கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்.

வேதாரண்யம் ஆயத்த ஆடை திட்டத்தைப் பொருத்தவரை 14 ஏக்கா் நிலம் ஜவுளித்துறை இடம் ஒப்படைக்கப்பட்டு, முதல் கட்ட பணிக்காக ரூ. 100 கோடி ஒதுக்க ஒப்புதல் கேட்டு மத்திய அரசிடம் அனுப்பப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக தற்போது திமுக அரசு அதனை வலியுறுத்தி பெற முயற்சிக்கவில்லை.

வேதா ஆயத்த ஆடை பூங்கா கொள்கை அளவில் வெற்றி பெற்றுள்ளது. தற்சமயம் நான்கு நிறுவனங்களில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பாா்த்து வருகின்றனா்.ஜவுளி பூங்கா முழு அளவில் செயல்படும்போது 24 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வேதா ஆயத்த ஆடை பூங்கா தொடங்கப்பட்டு, மினி திருப்பூா் என்ற பெருமையை வேதாரண்யம் பெறும்.

திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மக்களை துன்பத்திலிருந்து விடுவிப்பதற்காக தோ்தல் அறிக்கையில் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காலம் தாழ்த்தாமல் இதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.