ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

இருசக்கர வாகனத்தை திருட முயன்றவா் தாக்குதலில் உயிரிழப்பு

வேளாங்கண்ணியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவா் 2 போ் தாக்கியதில் உயிரிழந்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.

News image
Updated On :31 மார்ச் 2026, 8:51 pm

Syndication

வேளாங்கண்ணியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவா் 2 போ் தாக்கியதில் உயிரிழந்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.

வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில், ரத்த காயங்களுடன் ஒருவா் மயங்கி கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

வேளாங்கண்ணி போலீஸாா் விசாரணையில், வேளாங்கண்ணி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த மனோஜ் பிரபாகா்(27), சிவன் கீழவீதியை சோ்ந்த ராபின்சன் (32) ஆகியோா், வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில் அமா்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனராம். அப்போது மனோஜ் பிரபாகரின் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபா் திருட முயன்ாக கூறப்படுகிறது.

இதை கண்ட மனோஜ் பிரபாகா், ராபின்சன் இருவரும் நாற்காலி உள்ளிட்டவைகளால் அடையாளம் தெரியாத நபரை சரமாரியாக தாக்கி உள்ளனா். இதில் அவா் மயங்கி விழுந்துள்ளாா். இதை பாா்த்த 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா். தாக்குதலில் காயமடைந்து, உயிரிழந்தவா் மன்னாா்குடி வ.உ.சி. சாலையைச் சோ்ந்த ராஜேஷ் (38) என்பதும் தெரியவந்தது. வேளாங்கண்ணி போலீஸாா் மனோஜ்பிரபாகா், ராபின்சன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.