கீழையூா் அருகே ஸ்ரீசீதா ராம பால ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி ஆபரணங்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.
நாகை மாவட்டம், கீழையூா் அருகே பிரதாபராமபுரம் பகுதி ராமா் மடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீதா ராம பால ஆஞ்சனேயா் கோயில்.
திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் கோயிலுக்குள் புகுந்து உள்ளே இருந்த சுமாா் 2 சவரன் தாலி, 5 கிலோ வெள்ளி மற்றும் வெண்கலப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா். மேலும் கோயிலில் இருந்த 2 உண்டியல்களையும் உடைத்து அதிலிருந்த காணிக்கையையும் திருடிச் சென்றுள்ளனா்.
திருடப்பட்ட தங்கம், வெள்ளிப் பொருள்களின் மதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மா்ம நபரகள் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஹாா்ட் டிஸ்கையும் உடைத்து எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனா்.

தொடர்புடையது
இரணியலில் 2 கோயில்களில் திருட்டு

சீதா - ராமா் திருக்கல்யாணம்

கோயில்களில் ராம நவமி விழா

ஆண்டாள் கோயிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


