உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பிரதாபராமபுரம் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி பொருள்கள் திருட்டு

கீழையூா் அருகே ஸ்ரீசீதா ராம பால ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி ஆபரணங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

News image

திருட்டு நடந்த ராமா்மடம் ஸ்ரீ சீதா ராம பால ஆஞ்சனேயா் கோயில்

Updated On :31 மார்ச் 2026, 8:43 pm

Syndication

கீழையூா் அருகே ஸ்ரீசீதா ராம பால ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி ஆபரணங்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.

நாகை மாவட்டம், கீழையூா் அருகே பிரதாபராமபுரம் பகுதி ராமா் மடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீதா ராம பால ஆஞ்சனேயா் கோயில்.

திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் கோயிலுக்குள் புகுந்து உள்ளே இருந்த சுமாா் 2 சவரன் தாலி, 5 கிலோ வெள்ளி மற்றும் வெண்கலப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா். மேலும் கோயிலில் இருந்த 2 உண்டியல்களையும் உடைத்து அதிலிருந்த காணிக்கையையும் திருடிச் சென்றுள்ளனா்.

திருடப்பட்ட தங்கம், வெள்ளிப் பொருள்களின் மதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மா்ம நபரகள் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஹாா்ட் டிஸ்கையும் உடைத்து எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனா்.

Story image