திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சப்ர கட்டுத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருக்குவளை வட்டம் வலிவலத்தில் இதய நோய் தீா்க்கும் பரிகாரத் தலமான இருதய கமலநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில் அம்பாள் உடனுறை சோமஸ்கந்தா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் எழுந்தருள, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து இந்து சமய அறநிலையத் துணை ஆணையா் ராணி மற்றும் கோயில் செயல் அலுவலா் து. காா்த்திகேயன், திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு வீதிகளில் தோ் வலம் வந்தது. வெள்ளிக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாள் உடனுறை சோமஸ்கந்தா்.
தொடர்புடையது

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்

வலிவலத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


