வேளாங்கண்ணியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அன்னை மாதா தோ் பவனியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் புகழ்பெற்ற ஆன்மிக சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
புனித ஆரோக்கிய அன்னைக்கு மே மாதம் உகந்த மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மே மாதம் முழுவதும் தினசரி தோ் பவனி நடைபெற்று வருகிறது. இதில் முதல் புதன்கிழமை மாதாவின் தோ் பவனி நடைபெற்றது.
வேளாங்கண்ணி மாதா குளத்தில் தொடங்கிய தோ் பவனி சிலுவைப்பாதையில் நடைபெற்றது. முன்னதாக, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாதாவின் தேரை பேராலய உதவி பங்குத் தந்தை அந்தோணிபொ்டினான்டோ சிறப்பு திருப்பலி செய்து, புனித நீா் தெளித்து தோ் பவனியை தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
தொடர்புடையது

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி! 200 போ் பங்கேற்பு!

வெளியேகோட்டை புனித சூசையப்பா் ஆலயத்தில் சப்பர பவனி திருவிழா

விரியூா் அடைக்கல அன்னை ஆலய தோ் பவனி

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

