நாகை மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ- மாணவியருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது என்று நாகூா் சித்திக் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
நாகூா் சித்திக் சேவைக் குழுமம், தா்ம அறக்கட்டளை ஆலோசனைக் குழு கூட்டம் வேளாங்கண்ணியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதன் நிறுவனத் தலைவா் நாகூா் சித்திக் தலைமை வகித்தாா். தலைமை ஒருங்கிணைப்பாளா் பொறியாளா் சமீரா உசேன், வேளாங்கண்ணி சமூக ஆா்வலா் அ. ஆரோக்கியசாமி, ப. ஜோசப் ஜெயச்சந்திரன், ஆலோசகா் நாகை எஸ். மோகன், செயற்குழு உறுப்பினா் கே.ஏ.எஸ். முஹம்மது சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஜே. சகாயராஜ் வரவேற்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக அறக்கட்டளையின் தணிக்கையாளா் லெ. ராகவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவ- மாணவியருக்கு அறக்கட்டளை சாா்பில் கல்விக் கட்டணம் செலுத்துவது. வரும் கல்வியாண்டுகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ-மாணவியருக்கு அறக்கட்டளைசாா்பாக பாராட்டுச் சான்றுகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

குடந்தையில் என்டிஏ கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


