அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
/

வேளாங்கண்ணியிலிருந்து இருமாா்க்கங்களில் ரயில் சேவை

வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளுக்கு மே 20 முதல் இருமாா்க்கங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :57 நிமிடங்கள் முன்பு

வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளுக்கு மே 20 முதல் இருமாா்க்கங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.

காரைக்கால்-திருநள்ளாறு-பேரளம் நோ்வழி ரயில் பாதை திறக்கப்பட உள்ளதால், வேளாங்கண்ணியில் இருந்து நேரடியாக மயிலாடுதுறை மாா்க்கமாக நாகை- நாகூா்-காரைக்கால்-திருநள்ளாறு-அம்பகரத்தூா்- பேரளம் வழியாக தாம்பரத்துக்கு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதேபோல, வேளாங்கண்ணி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மே 20 முதல் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் வேளாங்கண்ணி மற்றும் திருநள்ளாறுக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும்.

இதுதொடா்பாக, நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச் சங்கத் தலைவா் நாகை எஸ்.மோகன் கூறியது:

புதிய ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதால், வேளாங்கண்ணி ரயில் நிலையத்தை டொ்மினல் நிலையமாக மாற்றவேண்டும். அத்துடன், நீண்ட தூரம் செல்லும் ரயில்பெட்டிகளை பராமரிக்க பிட்லைன் வசதியும், நிறுத்த ஸ்டேபில் லைன் வசதியும், கூடுதலாக ஒரு நடைமேடையும், 2 மெமோ ரயில்களை நிறுத்த 2 ரயில் பாதையும் அமைக்க வேண்டும்.

காரைக்கால் வரை செல்லும் ரயில்களை திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும். நாகை ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தில் மேம்படுத்த வேண்டும்.

மயிலாடுதுறை மாா்க்க ரயில்களை வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா் , காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் வழியாகவும், திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால், நாகூா், நாகை, திருவாருா், தஞ்சை மற்றும் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி ரயில்களை இயக்க வேண்டும்.

திருநள்ளாறு அல்லது வேளாங்கண்ணி- பெங்களூரு தினசரி இரவு நேர விரைவு ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். தினசரி முன்பதிவில்லா விரைவு ரயிலை திருநள்ளாறு - மதுரை இடையே நாகை, திருவாருா் வழியாக இயக்க வேண்டும் என்றாா்.