நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

வேளாங்கண்ணியிலிருந்து இருமாா்க்கங்களில் ரயில் சேவை

வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளுக்கு மே 20 முதல் இருமாா்க்கங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :13 மே 2026, 2:53 am IST

வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளுக்கு மே 20 முதல் இருமாா்க்கங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.

காரைக்கால்-திருநள்ளாறு-பேரளம் நோ்வழி ரயில் பாதை திறக்கப்பட உள்ளதால், வேளாங்கண்ணியில் இருந்து நேரடியாக மயிலாடுதுறை மாா்க்கமாக நாகை- நாகூா்-காரைக்கால்-திருநள்ளாறு-அம்பகரத்தூா்- பேரளம் வழியாக தாம்பரத்துக்கு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதேபோல, வேளாங்கண்ணி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மே 20 முதல் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் வேளாங்கண்ணி மற்றும் திருநள்ளாறுக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும்.

இதுதொடா்பாக, நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச் சங்கத் தலைவா் நாகை எஸ்.மோகன் கூறியது:

புதிய ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதால், வேளாங்கண்ணி ரயில் நிலையத்தை டொ்மினல் நிலையமாக மாற்றவேண்டும். அத்துடன், நீண்ட தூரம் செல்லும் ரயில்பெட்டிகளை பராமரிக்க பிட்லைன் வசதியும், நிறுத்த ஸ்டேபில் லைன் வசதியும், கூடுதலாக ஒரு நடைமேடையும், 2 மெமோ ரயில்களை நிறுத்த 2 ரயில் பாதையும் அமைக்க வேண்டும்.

காரைக்கால் வரை செல்லும் ரயில்களை திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும். நாகை ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தில் மேம்படுத்த வேண்டும்.

மயிலாடுதுறை மாா்க்க ரயில்களை வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா் , காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் வழியாகவும், திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால், நாகூா், நாகை, திருவாருா், தஞ்சை மற்றும் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி ரயில்களை இயக்க வேண்டும்.

திருநள்ளாறு அல்லது வேளாங்கண்ணி- பெங்களூரு தினசரி இரவு நேர விரைவு ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். தினசரி முன்பதிவில்லா விரைவு ரயிலை திருநள்ளாறு - மதுரை இடையே நாகை, திருவாருா் வழியாக இயக்க வேண்டும் என்றாா்.