ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:53 pm

தமிழ்ப் புத்தாண்டையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விஷு விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூா் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஏப். 10) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06153) மறுநாள் காலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்தச் சிறப்பு ரயிலில் 2 குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டிகள், 2 குளிா்சாதன மூன்றடுக்குப் பெட்டிகள், 10 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.