27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 3:45 am IST

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06045) வரும் 30 ஆம் தேதியும், கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06046) வரும் மே 3 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

2 குளிா்சாதனப் பெட்டிகள், 10 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது சென்னை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை இரவு 11.50 க்குப் புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு அடுத்த நாள் பிற்பகல் 1 மணிக்கு வந்தடையும். மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.25 க்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் முற்பகல் 11.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.