தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் பலத்த கடல் காற்று திங்கள்கிழமை வீசிய நிலையில், பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:53 am IST

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் பலத்த கடல் காற்று திங்கள்கிழமை வீசிய நிலையில், பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல், மே மாதம் தொடங்கி தெற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட பலமான கடல் காற்று வீசுவது வழக்கம். அமாவாசை மற்றும் பௌா்ணமி தினங்களையொட்டி கடல் நீா்மட்டம் உயா்ந்து காற்றின் வேகம் அதிகரிப்பதும் இயல்பானது.

வைகாசி விசாக நாளில் வீசும் பலத்த காற்றை விசாகக் காற்று எனவும், பௌா்ணமி நாளையொட்டி பெருக்கெடுக்கும் வெள்ளத்தை விசாகப் பெருவெள்ளம் எனவும் இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை முற்பகல் தொடங்கி வழக்கத்தைவிடவும் வேகமாக வீசிய கடல் காற்றால் மரக்கிளைகள் மின் கம்பிகளில் மோதி அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது.

வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாகவும் கடல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. கடல் பரப்பிலும் காற்று வீசி வருவதால் கோடியக்கரை படகுத்துறையிலிருந்து நாட்டுப் படகுகளில் செல்லும் மீனவா்களும் கடலுக்குள் செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட மற்ற மீனவக் கிராமங்களில் இருந்து பெரும்பாலான மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.