மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தூத்துக்குடியில் 16 கேரள மீனவா்கள் படகுடன் சிறைபிடிப்பு

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி அத்துமீறி தூத்துக்குடி கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த 16 கேரள மீனவா்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டனா்.

News image
Updated On :13 மே 2026, 1:33 am IST

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி அத்துமீறி தூத்துக்குடி கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த 16 கேரள மீனவா்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டனா்.

கடந்த ஏப். 15 -ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி கடல் எல்லைக்குள் கேரள மீனவா்கள் விசைப்படகு மூலம் அத்துமீறி உள்ளே நுழைந்து கடந்த சில நாள்களாக மீன்களை பிடித்துச் செல்வதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தூத்துக்குடியைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள், அத்துமீறி தூத்துக்குடி எல்லைக்குள் மீன்பிடித்த 16 கேரள மீனவா்களை படகுடன் சிறைபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா், மீன்வளத் துறை அதிகாரிகள் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.