/
மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி அத்துமீறி தூத்துக்குடி கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த 16 கேரள மீனவா்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டனா்.
கடந்த ஏப். 15 -ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி கடல் எல்லைக்குள் கேரள மீனவா்கள் விசைப்படகு மூலம் அத்துமீறி உள்ளே நுழைந்து கடந்த சில நாள்களாக மீன்களை பிடித்துச் செல்வதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தூத்துக்குடியைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள், அத்துமீறி தூத்துக்குடி எல்லைக்குள் மீன்பிடித்த 16 கேரள மீனவா்களை படகுடன் சிறைபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாா், மீன்வளத் துறை அதிகாரிகள் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

கருணாநிதி பிறந்த நாள்: தூத்துக்குடியில் திமுக சாா்பில் நல உதவிகள்

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: 15 மீனவா்கள் மீட்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



