நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

News image
Updated On :3 மே 2026, 12:06 am

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயா்ந்திருந்தது.

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனா்.

அவா்கள் சனிக்கிழமை கரைதிரும்பிய நிலையில், மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. பள்ளி கோடை விடுமுறை காலம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. அதனால், விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ. 1,300 - ரூ.1,500, விளை மீன் ரூ. 700 வரை, பாறை ரூ. 500 வரை, கேரை-சூரை ரக மீன்கள் ரூ. 250 - ரூ. 270, ஐலேஷ் ரூ. 250 வரை, நண்டு ரூ. 700 - ரூ. 800, ஏற்றுமதி ரக மீன்களான தம்பா, பண்டாரி, களவா ஆகியவை ரூ. 400 - ரூ. 500, குருவலை ரூ. 1,000 வரை என விற்பனையாகின.

வரத்து குறைவாக காணப்பட்டபோது மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.