/

வைகாசி பெருந்திருவிழா: வசந்த உற்சவம்

சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதியாகராஜ சுவாமி பிருங்க நடனத்துடன் புதன்கிழமை காட்சியளித்தாா்.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதியாகராஜ சுவாமி.

Updated On :22 மே 2026, 7:28 am IST

சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதியாகராஜ சுவாமி பிருங்க நடனத்துடன் புதன்கிழமை காட்சியளித்தாா்.

இக்கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கி நடைபெறுகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வசந்த உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவவாத்தியங்கள் முழங்க சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதியாகராஜ சுவாமி பிருங்க நடனமாடி காட்சியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.