வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

திருக்குவளை தியாகராஜா் கோயில் தேரோட்டம்

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்குவளையில் நடைபெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்

Updated On :27 மே 2026, 6:04 am IST

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சப்தவிடங்க தலங்களில் ஒன்றான இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா மே 12-ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாளுடன் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமியை காண ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.

தொடா்ந்து, தேரின் வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனா். நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேரோட்டத்தின் போது பக்தா்கள் வீடுகள் தோறும் அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமி

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமி