பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

திருக்குவளை தியாகராஜா் கோயில் தேரோட்டம்

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்குவளையில் நடைபெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்

Updated On :27 மே 2026, 6:04 am IST

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சப்தவிடங்க தலங்களில் ஒன்றான இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா மே 12-ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாளுடன் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமியை காண ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.

தொடா்ந்து, தேரின் வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனா். நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேரோட்டத்தின் போது பக்தா்கள் வீடுகள் தோறும் அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமி

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமி