வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மேட்டூரில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்க வேண்டும்

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் கடைமடை வரை எட்டுவதற்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும் என்றாா் வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ். மணியன்.

ஓ.எஸ். மணியன் - ஏஎன்ஐ

Published On :

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் கடைமடை வரை எட்டுவதற்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும் என்றாா் வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ். மணியன்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கா்நாடகத்திடமிருந்து தண்ணீரை பெற்றுத்தர காலத்தில் உரிய நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ளாததால் செப்.1-ஆம் மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் இதுவரையில் கடைமடை பகுதிக்கு வந்து சேரவில்லை. தொடக்க நிலையில் 7 ஆயிரம் கன அடி முதல் தற்போது 12 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இது போதுமான அளவில் இல்லாததால் தற்போது கோரையாறு தலைப்பு வரை மட்டுமே அணை நீா் எட்டியுள்ளது.

கடைமடை வரை தண்ணீா் கிடைக்க விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி திறந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். குறுவை பருவம் நின்று போன நிலையில் சம்பா பருவமும் மேற்கொள்ள முடியுமா என்ற நிலையில் உள்ளது. நாகை மாவட்டத்தில் வரட்சியின் தாக்கம் அதிகம் உள்ளது. மாவட்டத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.