47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டியில்...

திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கமும், காவல் துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:12 am

தினமணி

திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கமும், காவல் துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.
 திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு எதிரே நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வி. தணிகாசலம் தலைமை வகித்தார்.
 காவல் ஆய்வாளர் கே. செந்தில்முருகன், போக்குவரத்து காவல் பிரிவு உதவி ஆய்வாளர் எஸ். ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா. அப்பாசாமி, வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடக்கி வைத்தார்.
 வர்த்தகர் சங்கத்தலைவர் எல். செந்தில்நாதன், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினார்.
 இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் துணை நிலை ஆளுநர் ஆர்.எஸ்.ஆர். இளங்கோவன், நிர்வாகிகள் ஜான்போஸ்கோ, அப்துல்ரகுமான், சதா.பத்மனாபன், பி. செல்வகுமார் உள்ளிட்ட ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
 நிறைவாக செயலர் ஜி. முத்துசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.