சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

கடன் பணத்தை கணவர்எடுத்துச் சென்றதால் மனைவி தற்கொலை

மகளிர் சுயஉதவிக் குழுவில் கடனாகப் பெற்ற பணத்தை கணவர் எடுத்துச் சென்றதால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

மகளிர் சுயஉதவிக் குழுவில் கடனாகப் பெற்ற பணத்தை கணவர் எடுத்துச் சென்றதால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருவாரூர் அருகேயுள்ள ராதாநல்லூரைச் சேர்ந்த கண்ணதாசன் மனைவி சிவசங்கரி (30). இவர் மகளிர் சுய உதவிக் குழுவில் கடனாக வாங்கிய பணத்தை வீட்டில் வைத்திருந்தாராம். அந்தப் பணத்தை கண்ணதாசன் எடுத்துச் சென்று செலவு செய்ததால், மனமுடைந்த சிவசங்கரி கடந்த மார்ச் 1 ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.

இதையறிந்த குடும்பத்தினர் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு அவர் புதன்கிழமை (மார்ச் 2) உயிரிழந்தார்.

இதுகுறித்த சிவசங்கரியின் சகோதரர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில், திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.