நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

வெஸ்டன் யூனியன் சார்பில் வாடிக்கையாளருக்கு 50 கிராம் தங்கம் பரிசு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், பணப்பரிவர்த்தனை செய்யும் வெஸ்டன் யூனியன் நிறுவனம் சார்பில், வாடிக்கையாளருக்கு 50 கிராம் தங்கம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், பணப்பரிவர்த்தனை செய்யும் வெஸ்டன் யூனியன் நிறுவனம் சார்பில், வாடிக்கையாளருக்கு 50 கிராம் தங்கம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எஸ். செந்தில்குமார் தலைமை வகித்தார். நிறுவனத்தின் நிறுவனர் ஏ.எல். செல்லையா, என். அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ். நாராயணமூர்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் துணைத் தலைவர் மும்பையைச் சேர்ந்த ரவிராஜ் ஷெட்டி, தென் மண்டல மேலாளர் ஹரிஹரபிரபு ஆகியோர் பங்கேற்று, வாடிக்கையாளர் முகம்மது யாசின் குடும்பத்தினருக்கு 50 கிராம் தங்கம் வழங்கி பேசியது:

அகில இந்திய அளவில் பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட 15 லட்சம் பேரில் 1500 பேருக்கு தலா 1 கிராம் தங்கமும், 10 பேருக்கு தலா 50 கிராம் தங்கமும் வழங்க தேர்வு செய்யப்பட்டது. இதில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த முகம்மது யாசின் குடும்பத்தினருக்கு 50 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

இதில் மூத்த வழக்குரைஞர் நா. பாலன், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், சசிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.