பாசன வாய்க்கால், வடிகால்களை தூர்வாராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வலங்கைமானில் வியாழக்கிழமை பாஜக மாநில வர்த்தக பிரிவு முன்னாள் செயலர் எஸ்.பி. ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது:
வடகிழக்குப் பருவ மழை தொடரும் நிலையில், ஆங்காங்கே மழைநீர் தேங்கி ஓடாமல் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் சரிவர தூர் வாரப்படவில்லை என்பது தான் உண்மை.
பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக பாசன வாய்க்கால், வடிகால்களை தூர்வார வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.