தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அக். 14-இல் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் அக். 14-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:02 am

DIN

திருவாரூர் மாவட்டத்தில் அக். 14-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திருவாரூர் வட்டம் திருவாதிரைமங்கலத்தில் திருவாரூர் கோட்டாட்சியர் தலைமையிலும், நன்னிலம் வட்டம் திருக்கொட்டாரத்தில் திருவாரூர் சரக துணைப் பதிவாளர், குடவாசல் வட்டம் மேலராமன்சேத்தியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர், வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், நீடாமங்கலம் வட்டம் ராயபுரத்தில் திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மன்னார்குடி வட்டம் வடபாதியில் மன்னார்குடி கோட்டாட்சியர், திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூரில் மன்னார்குடி சரக துணைப் பதிவாளர், கூத்தாநல்லூர் வட்டம் கலமலாபுரத்தில் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையிலும் அக். 14-ஆம் தேதி அந்தந்த இடங்களில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே, தொடர்புடைய பகுதி மக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடை மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்தும் கோரிக்கை மனு அளித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.