விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காவல்துறையை அறிவோம் நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  காவல் துறையை அறிவோம் நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:01 pm

DIN

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  காவல் துறையை அறிவோம் நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் திருமாறன் தலைமை வகித்தார்.
 மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் பயிற்சி முதல்வர் மாரியப்பன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குமுதம், நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்  தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
 காவல் துறையின் பல்வேறு பதவிகளான இரண்டாம் நிலை காவலர்,  முதல் நிலை காவலர், தலைமைக் காவலர்,  நிலைய எழுத்தர்,  உதவி ஆய்வாளர், ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி,  ஐ.ஜி.  ஏ.டி.ஜி.பி.,  டி.ஜி.பி. போன்றவை குறித்தும் இணையத்தின் வழியாக புகார் பதிவு செய்தல்,  ரசீது பெறுதல், முதல் தகவல் அறிக்கை, புலன் விசாரணை, குற்றப் பத்திரிகை,  ஹலோ போலீஸ்,  காவல்சோதனைச் சாவடிகளின் பயன்கள் போன்றவை குறித்து காவல் துறை துணைகண்காணிப்பாளர் எம்.ஜெபராஜ் பேசினார்.  உதவி ஆய்வாளர்கள் வல்லவராணி, சூர்யா மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர்.
 நிகழ்வு குறித்த கருத்துகளை ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக் பதிவு செய்தார்.  அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.