ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

வணிக வளாக மேலாளரைத் தாக்கியவருக்கு வலை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வணிகவளாக மேலாளரைத் தாக்கியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:44 am IST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வணிகவளாக மேலாளரைத் தாக்கியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
நாச்சிக்குளம் அரகாசு அம்மா தர்கா தெருவைச் சேர்ந்த கமாலுதீன் மகன் மைதீன் அப்துல் காதர் (38). இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் கடை வைத்திருக்கும் துளைசியாப்பட்டினம் முகமது இக்பால் மகன் சிராஜூதீனுக்கும் (39) முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில், திங்கள்கிழமை  இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மைதீன் அப்துல் காதரை சிராஜூதீன் தாக்கினாராம். இதில் காயமடைந்த மைதீன் அப்துல் காதர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, சிராஜூதீனை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.