திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வணிகவளாக மேலாளரைத் தாக்கியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
நாச்சிக்குளம் அரகாசு அம்மா தர்கா தெருவைச் சேர்ந்த கமாலுதீன் மகன் மைதீன் அப்துல் காதர் (38). இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் கடை வைத்திருக்கும் துளைசியாப்பட்டினம் முகமது இக்பால் மகன் சிராஜூதீனுக்கும் (39) முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில், திங்கள்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மைதீன் அப்துல் காதரை சிராஜூதீன் தாக்கினாராம். இதில் காயமடைந்த மைதீன் அப்துல் காதர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, சிராஜூதீனை தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


