"தினமணி' செய்தி எதிரொலியாக, திருக்கண்ணமங்கை- அம்மையப்பன் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை- அம்மையப்பன் சாலை மிகவும் மோசமான நிலையில், குண்டும், குழியுமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காட்சியளித்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்குள்ளாயினர். இந்த சாலையைச் சீரமைக்குமாறு இப்பகுதி மக்கள் பல்வேறு நிலைகளில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இங்கு புதிதாக சாலை அமைக்கக் கோரி, "தினமணி'யில் அண்மையில், "உயிர் பலிக்கு காத்திருக்கும் சாலை' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதைத் தீவிரமாக கருதிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், இப்பகுதி மக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவியர் மிகுந்த பயனடைந்து வருகின்றனர்.
திருவாரூர்- தஞ்சை சாலையையும், திருவாரூர்- கும்பகோணம் சாலையையும் இணைக்கும் பிரதான குறுக்குச் சாலையாக இந்த சாலை விளங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரவையில் வார்த்தை மோதல்! அமைச்சர் சரத் vs கே.என்.நேரு

பிரதமர் மோடிக்காக 1,100 ராக்கிகளை தயாரித்த பிருந்தாவன் விதவைகள்!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வரலாறு படைத்த கயல் தொடர்! குவியும் வாழ்த்து!
விடியோக்கள்

பேரவையில் வார்த்தை மோதல்! அமைச்சர் சரத் vs கே.என்.நேரு


