சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆறுகளில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், எண்கண் ஊராட்சிகுள்பட்ட வாளவாய்க்கால் தலைப்பு, மதகு மற்றும் நீடாமங்கலம் வட்டத்துக்குள்பட்ட மூணாறு தலைப்பு கோரையாறு

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருவாரூர் மாவட்டம், எண்கண் ஊராட்சிகுள்பட்ட வாளவாய்க்கால் தலைப்பு, மதகு மற்றும் நீடாமங்கலம் வட்டத்துக்குள்பட்ட மூணாறு தலைப்பு கோரையாறு ஆகிய பகுதிகளில் நீர்வரத்தை, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை முதன்மைச் செயலருமான மணிவாசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
 மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வின்போது, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி அப்பகுதிகளில் நீர்வரத்தைப் பார்வையிட்டு, பாசனத்துக்காக ஆறுகளுக்கு நீர் பிரித்து திறந்துவிடும் அளவீடு, கரைகளின் பலம் குறித்தும் செயற்பொறியாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி அறிவுறுத்தினார்.    
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வம், வருவாய்க் கோட்டாட்சியர்கள் முருகதாஸ், பத்மாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.