பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஆட்டோ நிறுத்துதலில் பிரச்னை: நடவடிக்கை கோரி சாலை மறியல்

கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே ஆட்டோ நிறுத்துதல் தொடர்பான புகார்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  திருவாரூரில் ஆட்டோ ஓட்டுநர்கள்

Updated On :26 ஜூன் 2018, 8:45 am IST

கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே ஆட்டோ நிறுத்துதல் தொடர்பான புகார்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  திருவாரூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்திய சாலை மறியலில் ஈடுபட்ட  100 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். 
திருவாரூர் மாவட்டம்,  கொரடாச்சேரி வெட்டாற்று பழைய பாலம் அருகே சிஐடியு ஆட்டோ நிறுத்தம் உள்ளது. சில  நாள்களுக்கு முன்பு புதிய பாலம் அருகே  சிலர் ஆட்டோக்களை  நிறுத்தியுள்ளனர். இதில், இருதரப்பினரிடையே  பிரச்னை  ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது எவ்வித  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென கூறப்படுகிறது. 
இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர்கள், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஆட்டோ  ஓட்டுநர்கள் சங்கச் செயலர் எம்.கே. அனிபா, சிஐடியு  மாவட்டப் பொருளர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் குணசீலி, டிஎஸ்பி நடராஜன் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.