திருவாரூர் அருகேயுள்ள வைப்பூர் ஊராட்சியில், நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், 68 பயனாளிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் புதன்கிழமை வழங்கினார்.
வைப்பூரில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பேசியது: பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் வகையில், திறந்தவெளியில் மலம்கழிப்பதை தவிர்த்து, சுகாதாரத்துடன் வாழ அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழிக்காத ஊராட்சிகளின் பட்டியலில் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வேளாண்மை இணை இயக்குநர் சங்கரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், வருவாய்க் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, இணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில் குமார், துணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டாட்சியர் ராஜன்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

