தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மன்னார்குடியை அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். முகாமை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.எஸ்.ஆர். தேவதாஸ் தொடங்கி வைத்தார்.
பெருகவாழ்ந்தான் அண்ணாசிலை சந்திப்பு, கடைவீதி, பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை சாலை, முத்துப்பேட்டை - மன்னார்குடி பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் ஆசிரியர் சந்திரசேகரன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் முத்துசிவா, முன்னாள் திட்ட அலுவலர் ராமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏனாதிமங்கலம் மங்களபுரீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

போலி சான்றிதழ் தயாரித்து அரசுப் பணம் கையாடல்: இருவருக்கு சிறைத் தண்டனை

1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழா் கால பெளத்த, துவாரபாலகா் சிற்பங்கள் கண்டெடுப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

