நன்னிலம் மற்றும் நீலக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருவாரூர் உதவி செயற் பொறியாளர் (புறநகர்)
என். பிரபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நன்னிலம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூர், ஏனங்குடி, ஆண்டிப்பந்தல், குவளைக்கால், கங்களாஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம், ஆணைக்குப்பம், தட்டாத்திமூலை, மூங்கில்குடி, கீழ்க்குடி, சலிப்பேரி, நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், நெய்க்குப்பை, புளிச்சக்காடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
நீலக்குடி பகுதியில்...இதேபோல் பிப்ரவரி 26-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை நீலக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வண்டாம்பாளை, சேந்தமங்கலம், நீலக்குடி, திருப்பயத்தங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருவாரூர் மின்வாரிய (நகர்) உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









