திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணனின் தாயார் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
கூட்டாநல்லூர் வட்டத்துக்கு உள்பட்ட நாலில் ஒன்று கிராமத்தில் வசித்து வந்த, மறைந்த கிருஷ்ணசாமி வாண்டையாரின் மனைவி நீலோத்பலாம்பாள் (83) உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், மாநில இளைஞரணி அமைப்பாளர் வெள்ளக்குடி சுவாமிநாதன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் ம. சுப்ரமணியன், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, நீலோத்பலாம்பாளின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதே கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நெல்லை, தென்காசியில் தொடா் அரிவாள் வெட்டு: 8 போ் கைது

குதிரை வேகத்தில் செயல்படுகிறாா் தமிழக முதல்வா் அமைச்சா் பெ. மதன்ராஜா
இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளி கைது

தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிதான் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றிபெற்றாா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


