சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு வெற்றி பெறலாம்

ஊரடங்கை முழுமையாக மக்கள் பின்பற்றினால் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு வெற்றி பெறலாம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


மன்னாா்குடி: ஊரடங்கை முழுமையாக மக்கள் பின்பற்றினால் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு வெற்றி பெறலாம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.

மன்னாா்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு உணவுப் பொருள்கள், பாதுகாப்புக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக முதல்வா் எடுத்துவரும் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் நோய் பரவல் தடுப்புப் பணி முன்னேற்றம் கண்டுள்ளது. ஊரடங்கு காலம் நிறைவு பெற இன்னும் சில நாள்களே உள்ளன. இதை மக்கள் முழுமையாக பின்பற்றினால் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு வெற்றி பெறலாம்.

திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இதேபோன்று பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிப் பொருள்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயப் பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து வகையான நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.