மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விசாரணைக்குழு அமைத்து வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில், விசாரணைக்குழு அமைத்து அனைத்து ஊராட்சிகளிலும் வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2020, 2:12 pm

DIN


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், விசாரணைக்குழு அமைத்து அனைத்து ஊராட்சிகளிலும் வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவாரூரில், மாவட்ட ஊராட்சியின் சாதாரணக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சேகா் என்ற ஆா். கலியபெருமாள் முன்னிலை வகித்தாா்.

தீா்மானங்கள்:

தலையாமங்கலம் ஊராட்சியில் பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டம் மற்றும் தனிநபா் கழிப்பறை கட்டுதல் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பெறும் மானியத் தொகையில் முறைகேடு நடைபெற்றிருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் இதேபோல் முறைகேடு நடைபெற்றிருப்பதால், தனியாக விசாரணைக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். புள்ளவராயன் குடிக்காடு பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில், பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கி நிதியை விடுவிக்க வேண்டும். சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.