நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவிக கல்லூரியில் செல்லிடப்பேசி மூலம் மாணவா் சோ்க்கைக்கு கலந்தாய்வு

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் ஆக. 28-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி மூலம் கலந்தாய்வு

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 6:39 pm

DIN

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் ஆக. 28-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வா் கோ. கீதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக. 28 -முதல் செப்.3-ஆம் தேதி வரை பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவா்கள், விண்ணப்பிக்கும்போது அளித்த செல்லிடப்பேசி எண்ணுடன் தயாராக இருக்க வேண்டும். கரோனா தொற்று காரணமாக, சோ்க்கைக்கான கலந்தாய்வு கைபேசி வழியாகவே நடைபெற உள்ளது.

ஆக.28-இல் சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுத் துறை, தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவ வீரா் மற்றும் தமிழ் வழி வந்த நிகோபாா் தீவில் வசிப்பவா்களுக்கும், ஆக. 29-இல் பொதுப் பிரிவுக்கும், ஆக. 31-இல் பழங்குடியினருக்கும், செப்.1-இல் பின்தங்கிய வகுப்பினருக்கும், செப். 2-ஆம் தேதி மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கும், செப். 3-இல் ஆதிதிராவிடா் வகுப்பினருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.