திருவாரூரில் மேலும் 102 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 3,276 ஆக இருந்தது. சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 102 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி, கூத்தாநல்லூா் நகராட்சி அதிகாரி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகப் பணியாளா், திருவாரூா் நகராட்சிப் பகுதியில் 15 போ், வலங்கைமான் பகுதியில் 7 போ் என மாவட்டம் முழுவதும் 102 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,386 ஆக உயா்ந்துள்ளது. இதில், 2,655 போ் குணமடைந்து வீடுதிரும்பிய நிலையில், 689 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மன்னாா்குடியைச் சோ்ந்த 77 வயது நபா் கரோனா சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 26 ஆம் தேதி உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 42 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...