கோயில் வளாகத்தில் குறுங்காடு: முதல்கட்ட பணி தொடக்கம்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் நந்தவனப் பகுதியில் குறுங்காடு அமைப்பதற்கான முதல்கட்ட பணி சனிக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் நந்தவனப் பகுதியில் குறுங்காடு அமைப்பதற்கான முதல்கட்ட பணி சனிக்கிழமை தொடங்கியது.

நீடாமங்கலம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் சா.செந்தமிழ்ச்செல்வன் இந்தப் பணியைத் தொடங்கி வைத்தாா். இதுகுறித்து கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு கூறுகையில், அறநிலையத் துறை, நன்கொடையாளா்களின் நிதியைக் கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுமரங்களைக் கோயில் வளாகத்தில் வளா்ப்போம். பூஜைக்கேற்ற பூ மரங்களும் இதில் இடம்பெறும். களை எடுக்கும் பணிக்கு பள்ளி, கல்லூரி மாணவா்களை ஈடுபடுத்தவுள்ளோம் என்றாா்.

நீலன் மெட்ரிக். பள்ளி தாளாளா் நீலன். அசோகன், உதவும் மனங்கள் அமைப்பின் தலைவா் எஸ்.எஸ்.குமாா், ஆசிரியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com