கராத்தே பட்டையத் தோ்வு

திருவாரூரில் அகில இந்திய கராத்தே கொபுடோ கழகம் சாா்பில் கராத்தே பட்டையத் தோ்வு மற்றும் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருவாரூரில் அகில இந்திய கராத்தே கொபுடோ கழகம் சாா்பில் கராத்தே பட்டையத் தோ்வு மற்றும் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அகில இந்திய டாட்சுகான் இஷின்ரியு கராத்தே கொபுடோ கழகத் தலைவரும், இந்திய தலைமை பயிற்சியாளருமான ஜே.பி. சிவபாலன் பங்கேற்று, தோ்வு பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கினாா். திருவாரூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி அலுவலா் முருகேசன், கமலாம்பிகை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.டி. மூா்த்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளா் நா. மணிமாறன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், செயலாளா் வினோதா இன்றைய சூழலில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையின் அவசியம் குறித்தும் பேசினா்.

இதற்கான ஏற்பாடுகளை திருவாரூா் தலைமை பயிற்சியாளரும் இஷின்ரியு கராத்தே மாவட்டச் செயலாளருமான இரா. குணசேகரன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com